Presidential Secretariat of Sri Lanka

COP 27 மாநாட்டுடன் இணைந்து கடன் முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva), கானாவின் நிதி அமைச்சர் கென் ஒபோரி-அட்டா(Ken Ofori-Atta) மற்றும் மாலைதீவு மக்கள் மஜ்லிஸின் சபாநாயகர் மொஹமட் நஷீட்(Mohamed Nasheed) ஆகியோருக்குமிடையில் கடன் முகாமைத்துவம் தொடர்பான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டுடன் இணைந்ததாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் கலந்துகொண்டார்.

(English) Recent News

Most popular