அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “ஜனபதி ஆலோச்சனய” நூல், இன்று (04) முற்பகல் அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் கடந்த இரண்டு வருடகால நடைமுறைகள் தொடர்பில் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.