ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) முற்பகல் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் சபைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளை செவிமடுத்தார்.
புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி அவர்கள் சபைக்கு வருகைதந்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.