Presidential Secretariat of Sri Lanka

தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள்

மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவும் கீழ் மட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது அன்றாட பணிகளுக்கு மேலதிகமாக முன்னுரிமை அளித்திருப்பதால், தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நேரத்தை செலவிடுவதினால் விழாக்கள், பரிசளிப்பு நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள நேரம் இல்லாத காரணத்தினால் அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என அனைவரிடமும் அன்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது நேரத்தை முழுமையாக மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கவும் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக பணிகளை நெறிப்படுத்தவும் தலைமைத்துவத்தை வழங்குவதால், ஜனாதிபதி அவர்களின் பங்கேற்பை எதிர்பார்க்கும் தரப்பினரிடம் இந்த வேண்டுகொள் விடுக்கப்படுகின்றது.

(English) Recent News

Most popular