வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விகாரையின் வருடாந்த ஸ்ரீ தலதா மகா பெரஹர நேற்று (29) இரவு வீதி உலா வந்தது.
விகாரைக்கு புனித தந்தம் அடங்கிய பேழையை கொண்டு வரும் நிகழ்வு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் அனுசாசன உரையை நிகழ்த்தினார். விகாராதிபதி சங்கைக்குரிய அளுத்நுவர அனுருத்த தேரர் சமயக் கிரியைகளை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மங்கள பேழையை புனித தந்தத்தை சுமந்து வரும் யானை மீது வைத்தார்.
ஜனாதிபதி அவர்கள் நிலமேக்களுடன் குழு புகைப்படத்திலும் தோற்றினார்.