மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் எச்.எம்.டி.நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.